Wednesday, December 2, 2009

காதலே!

உன் கைக் கோதலில்
கலைந்து கிடந்த
என் தமிழ்த் தலைமுடி
கவிதையாய் வாரப்பட்டது
காதலே!

இளசு :

இருந்தது.. சிக்கெடுக்கப்பட்டது... சீரானது .. காதல் ஒரு சீப்பு..
சரிதான்..

இல்லாதவர்க்கும் (தமிழ்ச்)சிகை முளைக்கவைக்கும் தைலமாமே காதல்..
இது சரிதானா தாமரை?


காதலின் லீலைகள் அறிந்தார் உண்டோ
அது முளைக்கவும் வைக்கும், வாரியும் விடும்
பிய்த்துக் கொள்ளவும் வைக்கும். வழித்தும் விடும்
பூமிதன்னில் காதலில்லையேல்
இத்தனை அலங்(கோல)காரங்கள் உண்டோ???

No comments:

Post a Comment