Friday, December 4, 2009

டிரான்ஃபர்!!!

ஆயிரக் கணக்கில்
வானரங்களை
பலியிட்டு
சீதைக்கு டிரான்ஸ்ஃபர்

அசோக வனத்திலிருந்து
ஆளரவமில்லா
இன்னொரு வனத்திற்கு...


தக தக தக தக
தங்க வேட்டை
டார்ச்சரில் இராமன்
பின்னாலேயே இலட்சுமணன்
தொலைந்து போனாள் சீதை..

தங்க மானை
விரட்டி ஏமாந்த இராமனுக்கு
தங்கத்தின் மேல்
ஆசை விடவில்லை...
ஆம்
அசுவமேத யாகத்தில்
அருகில்
தங்கச் சீதை

வில்லொடித்து
மணம் புரிந்தான்
அப்போதே
புரிந்து கொண்டிருக்க வேண்டும்
தன் சொல்லொடித்து
வனம் அனுப்புவானென

No comments:

Post a Comment