Tuesday, December 1, 2009

தாம்பூலத் தட்டு - வாழ்க்கை

நிச்சயதார்த்தத்திலும், சடங்குகளிலும் தேங்காய் பழத் தட்டுகள் வைப்பார்கள். அதில் தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை பாக்கு இவை இருக்கும். இவை முறையே இலை, பூ, காய், கனி, விதை இவற்றைக் குறிக்கும். ஒரு தாவரத்தின் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் குறிக்கும் இது, முழு வாழ்க்கை என்பதை குறிக்கும் அடையாளம்.

இதிலும் எதைக் கொண்டு குறிக்கிறார்கள்

வெற்றிலைக் கொடியின் பெரும்பயன் வெற்றிலை
பாக்கு மரத்தின் பெரும்பயன் பாக்கு
தென்னையின் பெரும்பயன் தேங்காய்
வாழையின் பெரும்பயன் பழம்
மல்லிகையின் பெரும் பயன் பூ

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் பயனுள்ளவராய் இருத்தலே நிறைவான வாழ்க்கை.. அதனாலேயே இவை கொண்டு தாம்பூலத் தட்டு.

No comments:

Post a Comment