கண்ணுக்குள் உமை வைத்து
இமைக் கதவை மூடி இருந்தேன்...
பொல்லாத புழுக்கமென
மறுபடியும்
திறந்து விட்டேன்..
காற்றுச் சக்களத்தி,
கண்டபடி உரச
கோபத்தில் சாத்தி விட்டேன்..
ஏதோ குரல் கேட்டேன்...
யாரோ சொன்னார்கள்...
ஏன் பட பட வென
உன் இமைகள்
துடிக்கின்றன...
என் வலி
எனக்கல்லவா தெரியும்...
No comments:
Post a Comment