Friday, December 4, 2009

சரிகம குடும்பம்!!!

என்னங்க வீடே "வெறிச்"சுன்னு இருக்குங்க. அப்பா அம்மாவை வீட்டுக்கு அழைச்சிகிட்டு வந்திடலாங்க. கெஞ்சலாகச் சொன்னாள் வித்யா.

என்ன சொல்ற வித்யா, நீ தானே இருக்குற கொஞ்ச காலம் அவங்க அவங்க வயசு நண்பர்களோட அமைதியா சந்தோஷமா நிம்மதியா இருக்கட்டும். இங்கே அவங்களுக்கு கூடப் பேச்சுத் துணை கூட இல்லாம ரொம்பக் கஷ்டப் படறாங்க அப்படின்னெல்லாம் என்னைச் சமாதானப் படுத்தி அவங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்ட.. ஆச்சர்யமாய்ப் பார்த்தான் விஜய்..

அப்பா குரல் எவ்வளவு கணீர்னு இருக்கும் இல்லையா? வாராய் நீ வாராய்னு பாட ஆரம்பிச்சா இன்னிக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம். அம்மா மட்டும் என்னவாம்.. குறையேதுமில்லைன்னு பாட ஆரம்பிச்சா மனசில இருக்கிற அத்தனைக் கனமும் போய் அப்படியே இலேசாயிடுமே... நம்ம வினய்க்கும் அவங்களோட இருந்தா நல்ல சங்கீதமும் வரும். கதை சொல்வதற்கும்.,. குழந்தையும் குடும்பம் பந்தம் பாசம்னு நல்லா வருவான் இல்லியா.. வித்யா கெஞ்சினாள்..

சரி சரி இந்த சனிக்கிழமையே போய் அழைச்சிகிட்டு வந்திடலாம். சரியா.. இப்போ செல்வம் வீடு வரைக்கும் போகணும் கொஞ்சம் வழி விடறயா? விஜய் சந்தோஷமாகக் கொஞ்சினான்..

விஜய் கிளம்பியதும்.. வித்யா விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தாள்..

வேணு கோபால் - தாத்தா - வயது 60.............. ..... ........... ....
கலாதேவி - பாட்டி - வயது 55 ....... ...... ..... ....
விஜய் - அப்பா - வயது 35 .............. ..... ........... ....
வித்யா - அம்மா - வயது - 32 .............. ..... ........... ....
வினய் - வயது - 9 .............. ..... ........... ....


விண்ணப்பத்தை பூர்த்து செய்து கவரில் முகவரியை எழுத ஆரம்பித்தாள்.


சக்ரா சரிகம ஃபேமிலி
விஜய் டி.வி..
தபால் பெட்டி எண் ...
சென்னை ...

(குறிப்பு : விஜய் டி.வி.யில் சக்ரா சரிகம ஃபேமிலி என்ற ரியாலிடி ஷோ விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

நிபந்தனை

10 வயதுக்குட்பட்டக் குழந்தை
தாய் தந்தை
தாத்தா பாட்டி

என ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கலந்து கொள்ள வேண்டுமாம்.)

No comments:

Post a Comment