Friday, December 4, 2009

மை!!!

முழுமை
கொட்டிய பின்னரும்
பாக்கி இருந்தது
சிறுமை


ஒரு குப்பியில் உள்ள அனைத்து மையையும் கொட்டிவிட்டாலும் கறையாக சிறிதளவு மை எஞ்சி நிற்கும்.

முழுமை உள்ளவர்கள், பெரியவர்கள், அறிவில் சிறந்தவர்கள் வார்த்தைகளை சிந்தியாமல் கொட்டி விட்டால் அவர்களுக்கு எஞ்சி நிற்பது சிறுமைதான்.

பெரியவர்கள் எவ்வளவுதான் இடித்துரைத்தாலும் சிறுமதி பட்டறிவு வரும் வரை முழுதுமாக மாறுவதில்லை, கொஞ்சமாவது எஞ்சி நிற்கும்.

இப்படி இன்னும் சில வித பொருள் தரும்

மூலப் பொருள்

ஒரு கவிஞனாக.,
உள்ளத்தில் உள்ளதையெல்லாம்..
காகிததில் கவிதையாய் வரைந்த பின்பும்...
அவன் கவிதை முழுமை பெறவில்லை...
இன்னும் சொல்லாமல் விட்டவை உண்டு

எவ்வளவு எழுதியும் மனநிறைவு இல்லை ...

No comments:

Post a Comment