Wednesday, December 2, 2009

வீழும் விண்மீன்...!!

இணையே, வாழ்க்கை துணையே...
எதேனும் ஓர் ஏகாந்த இரவில்
வீழ்கின்ற விண்மீனைக் கண்டால்
விருப்பத்தை வேண்டிக்கொள்
நினைத்தது நிறைவேறும்,
உண்மை...........!
நானும் ஒருநாள் வேண்டிக்கொண்டேன்
நீ கிடைத்தாய்.....!!!
---சிவா.ஜி


சிவாஜி அண்ணன் திடீர்னு ரொம்ப நாள் கழிச்சி இந்த மாதிரி எழுதினதால அண்ணி என்ன பதில் சொல்லுவாங்க அப்படின்னு தோணிச்சி...

------------------------------------------------------------------------


எரி நட்சத்திரம் வீழ்வதைக் கண்டால்
ஞாபக மறதி வருமாம்
என்னை நீர் மறந்ததும்
அப்படித்தானோ

எத்தனையோ நானும்தான் பார்த்துவிட்டேன்
மறக்க முடிவதில்லை

விழும் நட்சத்திரங்களெல்லாம்
உன்னிடம் என் சோகம் சொல்லத்தான்
விரைகிறது என
நிலவு எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது

இறுதியில்
ஒரே ஒரு நட்சத்திரம்
உன்னிடம் சேர்ந்ததை
சில வரிகளில் அறிந்தேன்..

வேண்டுதல் எல்லாம்
எனக்காக நீ அல்ல
உனக்காக நான்.

No comments:

Post a Comment