Wednesday, December 2, 2009

மந்திரம்!

ஒரு நாளு மொக்கைச் சாமி ஒரு புது ஊருக்குப் போனாரு..

அங்க ஒரு பெரியவர் அடுப்பூதிகிட்டு இருந்தாரு

என்ன பெரியவரே பண்ணறீங்க.. அப்படின்னு கேட்டாரு மொக்கை,

டீ காய்ச்சணும். அதனாலதான் அடுப்பூதி பாலை சூடு பண்ணறேன் அப்படின்னாரு பெரியவர்.

பலே பெரிய ஆள்தான் போல இருக்குன்னு நினைச்சுகிட்டு மொக்கச் சாமி மேலத்தெருவில வந்த வேலையை முடிச்சுகிட்டு திரும்ப வந்தாரு.. அப்போ அந்தப் பெரியவர் டீயை ஊதி ஊதிக் குடிச்சிகிட்டு இருந்தார்.

இப்ப எதுக்கு பெரியவரே ஊதறீங்கன்னு கேட்டார் மொக்கைச் சாமி. டீ ரொம்பச் சூடா இருக்கு.. அதான் ஆற வைக்கிறேன் அப்படின்னாரு..

அட சூடுபண்ணவும் ஊதனாரு.. இப்போ ஆற வைக்கவும் ஊதராறே பெரிய கைகாரர்தான் பெரியவர்னு நினைச்சுகிட்டான் மொக்கைச் சாமி..

அடுத்த நாள் வரும்போது பெரியவர் பலூன் ஊதிகிட்டு இருந்தார். என்ன பெரியவரே பண்ணறீங்கன்னு வழக்கம் போல மொக்கை கேட்க. இதைப் பெரிசாக்க ஊதறேன்னாரு.. பெரிசு..

ஈவினிங் திரும்பி வரும்பொழுது பாத்தா பெரிசு புல்லாங்குழல் ஊதிகிட்டு இருந்தாரு.. ஆஹா பெரிசு பெரிய மந்திரவாதி போல இருக்கேன்னு மொக்கை ஆச்சர்யப்பட்டாரு. பெரிசை புகழோ புகழுன்னு புகழ்ந்து தள்ளிட்டாரு.

அடுத்த வாரம் மொக்கை மறுபடி அந்த ஊருக்கு வந்தாரு.. பார்த்தா பெரிசு அவுட்.. என்னாச்சுன்னு கேட்டா திடீர்னு மூச்சு நின்னுருச்சு அப்படின்னாங்களாம்..

உடனே மொக்கை வெளிய ஓடினார்..

ஓடிப்போய் அங்கு சங்கு ஊதறவனைப் பார்த்து கத்தினார்..

யோவ் நிப்பாட்டுய்யா அவர்தான் ஊதி ஊதி மந்திரம் செஞ்சுகிட்டே இருந்தாரு. மந்திர சக்தியை அடிக்கடி தேவையில்லாம செலவு பண்ணினா இப்படித்தான்.. அது நம்மையே பலி வாங்கிடும். நீயாவது ஊதாம இருன்னாராம். மொக்கை.

No comments:

Post a Comment