Wednesday, December 2, 2009

நான் யாராய்? - மனசாட்சி!

நண்பர்கள் மட்டுமே
நல்லவர்கள் என்பவனிடம்
நான் நண்பனாய்!

தாயார் மட்டுமே
நல்லவர் என்பவனிடம்
நான் தாயாய்

எல்லோரும் நல்லவரே
என்பவனிடம்
நான் நானாய்

எல்லோரும் அயோக்கியர்
என்பவரிடம்
நான் யாராய்?

அவரவர்க்கு அவரவர் மனசாட்சி எப்பொழுதும் நல்லதே செய்யும். அவர்களுக்கும் மனசாட்சி நல்லதாகவே தெரியும்...

நான் மட்டுமே நல்லவன் என்பவனின் மனசாட்சி சுயநலமாக இருக்கும்.
தாய் மட்டுமே நல்லவள் என்பவனின் மனசாட்சி அவனுக்குத் தாயாய் தெரியும்.

எவருமே நல்லவர் இல்லை என்று சொல்பவனுக்கு மன்சாட்சி என்பது உண்டா என்பது கேள்வி.!!

நீ யாரையெல்லாம் மதிக்கிறாயோ அவ்ராக எல்லாம் உன் மனசாட்சி உனக்கு விளங்கும்..

No comments:

Post a Comment