Tuesday, December 1, 2009

மரணம்!!!

மனிதன்
ஒரு விசித்திரப் பிறவி..
பிணத்தைச் சுமந்தாலும்..
பிற்காலச் சிந்தனையின்றி
நாடுகிறான் இன்பத்தை...

ஆனால்...
இறுதிக் காலத்திலே
இரவு நேரமெல்லாம்...
அவனுக்கு
இறப்பு ஞாபகம்தான்...

மணக்க மணக்க
அலங்கரித்த உடல்..
மண்ணால் தின்னப் படுமோ...?

நிமிடத்திற்கு நிமிடம்
ஊதிய சிகரெட் போல்
ஊர்ச் சுடுகாட்டிலே
சாம்பலாய் போய்விடுமோ...?

எங்கே போகுமோ
என் எண்ணங்கள்...?
என்னும்
எண்ணங்களின் அலைகளிப்புகள் தான்..

எலும்புக் கூட்டை
பார்க்கும் போதெல்லாம்..
எழாத எண்ணங்கள்
எழ முடியாத போது தானே
எழுகின்றன..

சார்ந்தவர்களுக்கு...
நிமிடத்தில் வரும் மரணம்
துக்கத்தைத் தரும்..

தள்ளிப் போடப்பட்ட மரணம்
நரகம்..
சாகின்றவனுக்கும்.

.

No comments:

Post a Comment