Tuesday, December 1, 2009

தங்கத் தலைவன்


தங்கக் கைகளால் தருமம் செய்திட்ட
    தலைவன் நலம் பெறுக
எங்கள் குறைதீர்த்த ஏழைப் பங்காளன்
    எல்லா நலமும் பெறுக
இது மக்களின் குறை இறைவா
     இதை மாற்றிடு என் இறைவா ---(தங்கக்)

அஞ்சி நடந்திடும் வஞ்சியர்தம்
   அச்சத்தைத் தீர்த்தவராம்
கஞ்சி இல்லாமல் வாழும் ஏழைகளின்
    கவலையைத் தீர்த்தவராம்
அவர் உடலை நலமாக்கு
     அதையே வேண்டுகிறோம் இறைவா ---(தங்கக்)

பண்பாடு காத்து பழமையைப் போற்றி
     பாராண்ட சீராளனாம்
அன்போடு எம்மை அரசாண்ட எங்கள்
      அண்ணாவின் வழிநடக்கும்
அய்யாவைக் காப்பாற்று எங்கள்
       அழுதிடும் குரல்மாற்று... ---- (தங்கக்)

.

No comments:

Post a Comment