தங்கக் கைகளால் தருமம் செய்திட்ட
தலைவன் நலம் பெறுக
எங்கள் குறைதீர்த்த ஏழைப் பங்காளன்
எல்லா நலமும் பெறுக
இது மக்களின் குறை இறைவா
இதை மாற்றிடு என் இறைவா ---(தங்கக்)
அஞ்சி நடந்திடும் வஞ்சியர்தம்
அச்சத்தைத் தீர்த்தவராம்
கஞ்சி இல்லாமல் வாழும் ஏழைகளின்
கவலையைத் தீர்த்தவராம்
அவர் உடலை நலமாக்கு
அதையே வேண்டுகிறோம் இறைவா ---(தங்கக்)
பண்பாடு காத்து பழமையைப் போற்றி
பாராண்ட சீராளனாம்
அன்போடு எம்மை அரசாண்ட எங்கள்
அண்ணாவின் வழிநடக்கும்
அய்யாவைக் காப்பாற்று எங்கள்
அழுதிடும் குரல்மாற்று... ---- (தங்கக்)
.
No comments:
Post a Comment